Tuesday, March 06, 2007

கலைந்த காலைப் பொழுதுகள்

1ம் தேதி சில/பல ஆயிரம் ரூபாய்களை நம்ம வங்கி கணக்குல பார்க்கிறது அலாதியான சந்தோஷம் ! சும்மா அதுவும் smsல (சிறு செல்பேசி செய்தி..) சம்பளத்தப் பார்க்கிறது ரொம்ப சுகம்! மாதா மாதம்..வேலை பார்க்கிறேனோ இல்லையோ ,30/31 இரவு சம்பளம் வர்ரதை பார்க்காம இருந்தது இல்லை .எததனை பேர் இந்த அற்ப சந்தோசத்தை உணர்ந்து இருங்கீகன்னு தெரியல ! உணராதவங்க கண்டிப்பா உணர்ந்து பாருங்க..!
2ம் தேதி 100ரூபா இருக்கும் அது சோகமான விசயம்.:-(

மலறும் நினைவுகள் ! நினைச்சிப் பார்த்தாலே பூரிப்பா/சிரிப்பா இருக்கு !


மறக்காத கலைந்த காலைப் பொழுதுகள்..!
கி பி 2002 மார்ச் ..அழகிய சிவகாசி மாநகரம் செம்மண் காடு ! சனிக்கிழமை காலை 5-15மணி சூரியன் விழிப்பதற்க்கு முன்னர் ஒரு 3 VIP (வேலை இல்லா பட்டதாரி) வாலிபர்கள் திக்கு தெரியாம சைக்கிளில் சுத்திக்கிட்டு இருந்தோம் . ( இப்பவும் IT MNC la வெட்டியாதான் வேலை பார்க்கிறோம்.. ) பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள டீக்கடை!
தினந்தந்தி,தினமலர்ல ஏன் வெறும் 10 பக்கம் மட்டும் இருக்குதுன்னு வருந்தப்பட்ட காலம்..:-)

வெறும் உண்டியல் காசு 8.50ருபாயல எங்கள் டீக்கடைக் கனவு ஓரு செல்பேசி,கணிணி,வண்டி (கட்டாயம் இல்ல).

சாயங்காலம் 4-30மணி.
எதிரில் 1500ரூபா (மாச )சம்பள வேலைக்கு எங்கள் சிநேகிதன்(கனிணிப் பொறியாளன் 75%) சைக்கிளில் செல்கிறான்.. நான் என் பக்கத்தில இருக்கும் நண்பனிடம் கேட்கிறேன் "ம் ! நாமல்லாம் எப்படா வேலைக்குப் போறது? " அவன் "டேய் நாமலும் வேலைக்குப் போவோம்,சம்பாதிப்போம்.ஆனா அவன் ,நம்ம இப்ப இருக்க மாதிரி இனிமே ஜாலியா இருக்க முடியுமா? அவன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ..."

[அந்த 1500ரூபா சம்பள வேலைக்கு நான் முயற்சி பண்ணினது வேற விசயம் :-))

எங்க பக்கத்தில டீ குடிக்கிற பெரிசுகள சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்
தம்பி என்ன படிச்சருகிங்க?
BE அப்படின்னா? எஞ்சியனியரிங்..
ஓ ! எத்தனை வருசம் படிச்சிங்க?
4 வருசம்
4 வருசம் படிச்சு வேலை கிடைக்கலையா? தம்பி முதலில் எந்த வேலை கிடைச்சாலும் அதில சேர்ந்திருங்க.கூச்சப்படாதிங்க..

""யோவ் ! 12 மாசத்துக்கு முன்னாடி appointment letter கொடுத்தான்,, வேலை சேர்ரதுக்கு 3மாசத்துக்கு முன்னாடி வர வேண்டான்னு சொல்லிட்டான் "" அப்படின்னு அவர்கிட்ட சொல்லக்கிட்டு இருக்க முடியாது..

மௌனம் ! வார்த்தைகளை விட மௌனத்துக்கு பல அர்த்தம்/பலம் இருக்கும் அது எல்லாருக்கும் புரியாது... புரிய வைக்கவும் முடியாது. எதிராளி கண்களை/முகத்த பார்த்து பேசினாத்தான் அது தெரியும் ! மௌனத்த பத்திப் படிக்கனும்ன "ஊருக்கு நல்லது சொல்வேன் " தமிழருவி மணியன் புத்தகத்தைப் வாசித்துப் பாருங்க." அருமையான புத்தகம்.

கி.பி 2007 மார்ச் 3 5 வருச வாழ்க்கைல எனக்கு 5எண் சம்பளம் கிடைச்சது தான் மிச்சம்.! இப்பவும் எனக்கு பல சனி/ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது தூக்கம் வர்றது இல்ல..வாழ்ககைல எப்பவும் நம்மல கண்ணுக்கு தெரியாம ஓரு சூனிய/தனிமை உண்ர்வு துரத்திக்கிட்டு வரதுன்னு நினைக்கிறேன்...! பார்ப்போம்..! அது ஆயிரம்/லட்சம்/கோடி ரூபா சம்பாதித்தாலும் விடாதுன்னு நினைக்கிறேன்

6 comments:

Anonymous said...

Good job, But the way of your writingsjust follow the way what most of tamil writers r doing be innovative think abnormally caz you are different

'))')) said...

ahaaaaaaaa superb ninaivugal arumai

Anonymous said...

எல்லாத்துளையும் காமெடி கலந்து கலக்குறியேடா.

'))')) said...

//வாழ்ககைல எப்பவும் நம்மல கண்ணுக்கு தெரியாம ஓரு சூனிய/தனிமை உண்ர்வு துரத்திக்கிட்டு வரதுன்னு நினைக்கிறேன்...! பார்ப்போம்..! அது ஆயிரம்/லட்சம்/கோடி ரூபா சம்பாதித்தாலும் விடாதுன்னு நினைக்கிறேன் //

100% உண்மை சரவணன் :-)

வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, தேவைகள் அதிகமாகும்; 4இலக்க வருமானம் சம்பாதிக்கறப்ப கிடைத்த சந்தோஷங்கள் நிறைவானவை ; 5இலக்கம், 6இலக்கம்னு சம்பளம் அதிகரிக்கறப்ப சந்தோஷங்கள் குறைந்துகொண்டே வரும்..என்பதை நானும் உணர்ந்திருக்கின்றேன்

வாழ்க்கை ஏணியில் உயரப்போகும்போது நமது தனிமை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்; கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடும் :-)

'))')) said...

Yes Money is not a matter for happiness.I used to read S.ramakrishnan writings.I am a drop in his ocean of words :-(.

'))')) said...

TOO GOOD MAN IT AGAIN PROOVES THT U CAN WRITE WELL WHICH AFFECTED U OR WAT U FEEL.SRAMAKRISHNAN PAATHIPU IRUKU YARUM SOLLA MATTANGA DO NOT WORRY?( ENAKAI KONJAM OVERATHAN THERIUTHU