குஞ்சு பொறிக்க தெரியாமல்,
பறக்கவும் முடியாமல்,
வாழவும் வழியில்லாமல்,
அழிவின் நாள் எண்ணி,
வளர்த்தவனுக்கும்
வேட்டைக்காரனுக்கும்
நடுவே,
வேடிக்கை மைதானத்தில்,
பண்டிகை நாளில்,
கொழுத்தவனின் ஆயுத பரிசோதனைக்கும்,
வன்மத்தின் கேடயமாய்,
இரையாகக் காத்திருக்கும்
கூண்டில் அடைப்பட்ட
கறிக் கோழிகள் !!!
0 comments:
Post a Comment