Wednesday, September 05, 2007

ராமு என்ற clone

2100 வருடம். உங்களுக்கு இந்த நூற்றாண்டு பற்றி தெரிய வாய்ப்பு இல்லை.ஸ்டேம் செல் முன்னேற்றத்தால் ஓரு வாரத்தில் 10கோடி ரூபாயில் நாம் விரும்பும் முழுவளர்ச்சி பெற்ற மனிதனை உருவாக்க முடியும். மேலும் digital செய்திகளை(DVD(10gb),DxD(100gb)) அப்படியே மூளையில் பதிவு செய்து ஞாபக சக்தியுடன் கூடிய புதிய மனிதனைத்(ரோபோ இல்லை, clone) தரமுடியும்.அவனை 100நாட்கள் ஓரு முறை பரிசோதித்து, சரிசெய்து அனுப்ப 1கோடி மட்டும்செலவு ஆகும். இப்பொழுது 2100 வருடம் செல்வோம்.

மருத்துவமனையில் இருந்து ஓரு ஓலக்குரல் !

மற்ற வியாதியஸ்ர்களைத் திடுக்கிட வைத்தது.

"என் பையன் ராமுவுக்கு என்ன ஆச்சு." கேட்டு மயக்கமடைந்தாள் கயல்விழி.

20நிமிசத்துக்கு முன்னர் போயிங் விமானம் திக்கு தெரியாமல் மலைமீது மோதி அதில் பயணித்த ராமு இறந்தது அவளுக்கு தெரியவாய்ப்பு இல்லை.

"கயல்விழி, கவலைப்படாத , ராமுவுக்கு வெறும் காயம் தான் உயிரோடுதான் இருக்கான்" சமதானப்படுத்தினார் ராமுவின் அப்பா ராஜா.

ராஜா அவசரமாக ராமு பிறந்தது முதல் 17வயது ஆகும்வரை பயன்படுத்தியது,படங்கள் நிழற்படம்,பேச்சுக்குரல்,எல்லாவற்றையும் DxD(100gb)ல் பதிவு செய்தார்.அதை அப்படியே
www.tamilnaduclone.comக்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு மரபணு ஆராய்ச்சி மையத் தலைவர் அரவிந்தனை நேரில் சந்தித்தார். ஓரு வாரத்தில் என் பையன் மாதிரி ஒரு clone வேணும். 10 கோடி பணம் அரசாங்கத்திடம் இருந்து வாங்கிய clone உரிமைப்பத்திரம்,என் மகனின் சகலசெய்திகளையும் DxDல் உங்களுக்கு அனுப்பிவிட்டேன்.DNA வங்கியில் இருந்துஎன் மனைவி மற்றும்,என் DNA code எடுக்க அனுமதி அளித்து இருக்கேன் என்றார். 10 நாளில் ராமுவைப் போலவே உருவாக்கப் பட்ட புதிய clone வந்தான். மருத்தவமனையில் இருந்த கயல்விழி ஓடோடி வந்து மகனை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்கினாள்.

"வந்துட்டியாட.flight வெடிச்சதுப் பார்த்து எனக்கு உயிரே போச்சு. இப்ப உன்ன பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு." "சின்னக் காயம் தான்மா.உயிர் பிழைச்சுட்டேன்." clone கூறியது.நீங்க கவலைப்படதீங்க.

நாட்கள் கடந்தன. கயல்விழி சகஜ நிலைமைக்கு திரும்பினாள்.

clone தனது உண்மையான ராமு இல்லை என்பதை நண்பர்கள் மூலம் உணர்ந்தாள்.அழுதாள் கயல்விழி , "இப்ப என்னால இந்த cloneஐ நம்ம பையனா ஏத்துக்க முடியாதுங்க!
100நாட்களுக்கு ஓரு முறை அவனுக்கு 1கோடி செலவு செய்ய வேணுமாங்க? " அவனை கருணைக்கொலை செய்யலாமா? நமக்கு உரிமை இருக்கா?

அப்பொழுது வந்த clone இதைக் கேட்டு வெட்கித்தலைகுனிந்தான். தான் ஓரு இயந்திரம் போல் நினைவுகளை உள் அடங்கியவன் எனவும், தனக்கு என்று ஓர் அடையாளம் கிடையாது என உணர்ந்தான். அவர்களுக்கு சங்கடம் கொடுக்காமல் தற்கொலை செய்ய அவன் முடிவு செய்தான். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------------------------------------
முடிவினை நிரப்புங்கள் பார்க்கலாம்

2 comments:

'))')) said...

MUDIALADA ITHUKU MUDIVU SOLLA ENTHA MOKKAI PAYA NINAICHALUM MUDIATHU POTHUM VITRU PAVAM NANGA,

UNNODA KAVITHAI NANAITU UNDU I GUESS CONFIDENTLY IT WAS NOT URS EVEN IT WAS NOT VINU'S I KNOW HOW HE WRITES? SOLLATHE YARUM KETTAL ENAKKU MATTUM!

'))')) said...

இது எனக்கு கிடைச்ச வெற்றி.என்னோடா பலமுகம் உனக்கு தெரியாது.காலம் உனக்கு தெரிவிக்கும்